இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என் சித்தப்பா அவர்களின் பேச்சில் கவரப்பட்டு நண்பர்கள் ஜெயகுமார், பரந்தாமன் மற்றும் முருகனுடன் Cambodiaவில் உள்ள அங்கோர்வாட் சென்றேன். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகையில்லை.
நம் தமிழர்கள் கடல் கடந்து சென்று நம் பெருமைகளை விட்டு சென்று இருக்கின்றார்கள். அங்கு உள்ள கோவில்கள்,நம் கட்டிட கலைக்கு சான்று. மகாபாரதம் சிற்பங்கள் நம் மனதையும் கண்களையும் கவரும். புடைப்பு சிற்பங்களின் வகை சார்ந்தது.
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளலாம். ஹிந்து மதத்தின் மிக பெரிய சான்று காலம் கடந்து நம் கண்ணில் மிக பெரிய காட்சியாக விரிகின்றது.
12-ஆம் நுற்றாண்டில் இந்திய பெருங்கண்டதிலிருந்து குடியேறியவர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. முதலில் இந்து கோவில்களும் பின்நாட்களில் புத்த மதமும் மாறி ஆட்சி செலுத்தியது. இதை பற்றி சுவாரசியமான கதை ஒன்றும் சொல்லபடுகிறது.கப்பலில் சென்ற இந்தியாவை சேர்ந்த இளவரசன் கம்போடியாவை அடைந்து அங்கு உள்ள மன்னனின் மகளை மணந்து "க்ஹெமெர் ' வம்சத்தை நிறுவினான் என்று போகின்றது.மேலும் அந்த வம்சத்தில் வந்த மன்னன் பிறகு புத்த மதத்தை தழுவினான். ஆனாலும் இந்து மதத்தின் மிச்சங்கள் நிறைய உள்ளன.
அன்று கடல் கடந்து நம் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை பரப்பினோம் ஆனால் இன்று தமிழன் உலக அரங்கில் சிலரின் பேராசையால் தலை குனிந்து நிற்கின்றான்.
நம் தமிழர்கள் கடல் கடந்து சென்று நம் பெருமைகளை விட்டு சென்று இருக்கின்றார்கள். அங்கு உள்ள கோவில்கள்,நம் கட்டிட கலைக்கு சான்று. மகாபாரதம் சிற்பங்கள் நம் மனதையும் கண்களையும் கவரும். புடைப்பு சிற்பங்களின் வகை சார்ந்தது.
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளலாம். ஹிந்து மதத்தின் மிக பெரிய சான்று காலம் கடந்து நம் கண்ணில் மிக பெரிய காட்சியாக விரிகின்றது.
12-ஆம் நுற்றாண்டில் இந்திய பெருங்கண்டதிலிருந்து குடியேறியவர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. முதலில் இந்து கோவில்களும் பின்நாட்களில் புத்த மதமும் மாறி ஆட்சி செலுத்தியது. இதை பற்றி சுவாரசியமான கதை ஒன்றும் சொல்லபடுகிறது.கப்பலில் சென்ற இந்தியாவை சேர்ந்த இளவரசன் கம்போடியாவை அடைந்து அங்கு உள்ள மன்னனின் மகளை மணந்து "க்ஹெமெர் ' வம்சத்தை நிறுவினான் என்று போகின்றது.மேலும் அந்த வம்சத்தில் வந்த மன்னன் பிறகு புத்த மதத்தை தழுவினான். ஆனாலும் இந்து மதத்தின் மிச்சங்கள் நிறைய உள்ளன.
அன்று கடல் கடந்து நம் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை பரப்பினோம் ஆனால் இன்று தமிழன் உலக அரங்கில் சிலரின் பேராசையால் தலை குனிந்து நிற்கின்றான்.
No comments:
Post a Comment