Tuesday, 23 April 2019

After a long gap................

Lot changed since my last posting........... Wish to continue my post will meet you soon.

Saturday, 1 November 2014

அங்கோர்வாட் பயணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என் சித்தப்பா அவர்களின் பேச்சில் கவரப்பட்டு  நண்பர்கள் ஜெயகுமார், பரந்தாமன் மற்றும் முருகனுடன் Cambodiaவில் உள்ள அங்கோர்வாட் சென்றேன். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகையில்லை.
நம் தமிழர்கள் கடல் கடந்து சென்று நம் பெருமைகளை விட்டு சென்று  இருக்கின்றார்கள். அங்கு உள்ள கோவில்கள்,நம் கட்டிட கலைக்கு சான்று. மகாபாரதம் சிற்பங்கள் நம் மனதையும் கண்களையும் கவரும். புடைப்பு சிற்பங்களின் வகை சார்ந்தது.
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளலாம். ஹிந்து மதத்தின் மிக பெரிய சான்று காலம் கடந்து நம் கண்ணில் மிக பெரிய காட்சியாக விரிகின்றது.
12-ஆம் நுற்றாண்டில் இந்திய பெருங்கண்டதிலிருந்து குடியேறியவர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. முதலில் இந்து கோவில்களும் பின்நாட்களில் புத்த மதமும் மாறி ஆட்சி செலுத்தியது. இதை பற்றி சுவாரசியமான கதை ஒன்றும் சொல்லபடுகிறது.கப்பலில் சென்ற இந்தியாவை சேர்ந்த இளவரசன் கம்போடியாவை அடைந்து அங்கு உள்ள மன்னனின் மகளை மணந்து "க்ஹெமெர் ' வம்சத்தை நிறுவினான் என்று போகின்றது.மேலும் அந்த வம்சத்தில் வந்த மன்னன் பிறகு புத்த மதத்தை தழுவினான். ஆனாலும் இந்து மதத்தின் மிச்சங்கள் நிறைய உள்ளன.

அன்று கடல் கடந்து நம் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை பரப்பினோம் ஆனால் இன்று தமிழன் உலக அரங்கில் சிலரின் பேராசையால் தலை குனிந்து நிற்கின்றான்.


உ ஷ் !!! அரசியல் வேண்டாம் என்றாலும் தவிர்க்க முடியவில்லை

அரசியல்வாதிகளின் மிக பெரிய நம்பிக்கை என்ன தெரியுமா? மக்களின் மறதி.

இதில் தற்போது அரசியல் விமர்சகர்களும் சேர்ந்துள்ளனர். இல்லையென்றால் இப்படி எதிர்மறையான கருத்துகளை சொல்லியிருக்க மாட்டார்கள். நான் யாரை சொல்லுகிறேன் என்று உங்கள்ளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தீர்ப்பை பற்றி 'சோ' அவர்களின் கருத்தைதான். 1991-96 கால கட்ட துக்ளக் வாசித்தவர்களுக்கு இன்றைய "சோ' அவர்களின் கருத்து வியப்பளித்தால் பாவம் அவர் என்ன பண்ணுவார்.நாம்தான் பழசை நினைவு படுத்திகொள்ள கூடாது.
வாழ்க தமிழரின் மறதி

Monday, 27 October 2014

எழுத்தாளர் ஜெயமோகன்



நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு நல்ல எழுத்தாளரின் அறிமுகம் எனது சித்தப்பா அவர்களின் மூலம் கிடைத்தது. இன்றைய நவீன தமிழ்  இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரம்   

அவரின் நினைவாற்றல் யாரையும் வியக்க வைக்கும். வாசிப்பு திறன் மற்றும் உழைப்பு இவரின் எழுத்தில் தெரிகிறது. அறம்,முன்சுவடுகள்,காந்தி, புறப்பாடு,ஏழாம் உலகம், வெள்ளையானை இப்போது வெண்முரசு  (இன்டர்நெட்-ல்) என்று என்னை முழுமையாக அவரது எழுத்துக்கள் ஆக்ரமித்து கொண்டுள்ளன என்றால் மிகையில்லை. இவ்வளவு நாட்களாக படிக்க தவறி விட்டமே என்ற வருத்தமே விஞ்சியுள்ளது. ஒவ்வொரு தொகுப்பும்  வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது.மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தும்  நிகழ்வுகளாக  நம்மை கொண்டு செல்கிறது. வார்த்தை அலங்கரங்களிலில்லை. ஆனால், மனதில் ஊடுருவி செல்கின்றது. நம் கண்முன்னே காட்சிகள் பறந்து விரிகின்றன. மறக்க முடியாத நினைவுகளை  விட்டு செல்கின்றது.